Search This Blog

Tuesday, April 7, 2026

மழை சிலையானால்

 

அழகிய இயற்கை பூங்காவில்

இங்கும் அங்குமாய் கண்முன்னே

இயற்கையோடு குப்பைகளும்

ஒன்றாக காட்சி அளித்தன


மழை நீர் பாதையை உருவாக்கியது

கப்பல் போன்ற காகிதங்களுக்கு

மழை ஆசை மறையவில்லை

தள்ளாடும் நிலையற்ற முதியவருக்கு


சிலைகள் நனைய ஆரம்பித்தன

குடையும் மரமும் சோகமாக

அழுவதற்கு தலை குனிந்தன

பல்வேறு உயிரினங்களுக்காக


மாலையைப் பெற்ற சிலையை

மழை அழகாக சுத்தம் செய்கிறது

இம்முறை அதற்கு சக்தி இல்லை

மக்களின் மனங்களை தூய்மைப்படுத்த


-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


No comments:

Post a Comment